வினவு களச் செய்தியாளர்
கழிவு நீர் ஊர்தி வேலை நிறுத்தம் : சாக்கடை அள்ற கையின்னு தண்ணி கூட கொடுக்க மாட்டாங்க !
இந்த வேலையால வரக்கூடிய நோயப்பத்தி சொல்லனுமே, சம்பு ஓப்பன் பண்ணினதும் ஒரு கேஸ் வரும். அது உள்ள போனதும் மாரை அடைக்கிற மாதிரி இருக்கும்.
இறைச்சித் தொழிலை அழிக்கும் பாஜக ! இறைச்சி சங்கத்தின் அன்வர் பாஷா நேர்காணல்
குஜராத், ராஜஸ்தானில் இவர்கள் ஆட்சிதானே. ஆடு-மாடு வெட்டுவதை ஏன் இவர்கள் தடை செய்யவில்லை? ஏனெனில், குஜராத், ராஜஸ்தான் மார்வாடிகள்தான் இந்த தொழிலில் இருக்கிறார்கள்.
தலைஞாயிறு : சொந்த நாட்டில் அகதிகளாய் தவிக்கும் மக்கள் !
இரவு நேரங்களில்கூட கடற்கரைச் சாலைகளின் இருபுறங்களிலும் வீடுகள் – உடைமைகளை இழந்த விவசாயிகள், யாரேனும் ஏதேனும் கொடுக்கமாட்டார்களா என கையேந்தி நிற்கிறார்கள்.
கஜா புயலில் கடலோடிகளின் வாழ்க்கை | காணொளி
கடல் சேறு வீட்டுக்குள்ள கிடக்கு. கட்டுன துணிமணிதான். வேற எதுவுமில்லை. இன்னிக்கு நேத்தா... தெம்பிருந்தா கரை சேரலாம். இல்லையா, மூனுநாளக்கி அப்புறம் எங்கனாச்சும் உடல் உப்பி கரை ஒதுங்க வேண்டிதான்...
கஜா புயல் : கதவுல தொத்திகிட்டிருக்கும் போதே கடலோட போயிருக்கலாம் !
கன்னத்தில் ஒரு கையை குத்திட்டு ஆட்டுக் கொட்டகை இருந்த இடத்தையும் சவுக்குத் தோப்பையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு இடிந்த கல்லறையில் எந்த அசைவுமின்றி உட்கார்ந்திருக்கிறார் ராஜேந்திரன்.
சென்னை மாநகராட்சி : தனியார் மயத்தை எதிர்த்து துப்புரவு தொழிலாளிகள் போராட்டம்
சுற்றுப்பயணத்தில் இருக்கிறாராம், முதல்வர். ஆகட்டும், ''பார்க்கலாம்'' என்கிறார் பன்னீர்செல்வம். அரசாங்கம் ஒரு முடிவு எடுத்து விட்டது. அதில் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது, என்கிறார் ஆணையர். நாங்கள் வேறு என்னதான் செய்ய முடியும்?
எல்லோரும் செத்து சுடுகாட்டுக்கு வருவாங்க நாங்க உயிரோட வந்துட்டோம் !
நாங்க வாய்க்கு ருசியா சாப்பாடு கேக்கல. பொங்கித்தின்ன கொஞ்சம் அரிசி, மண்ணெண்ணெய், முக்கியமா கொசுவத்தி வேணும்... இந்த நெலமையெல்லாம் பாக்கும்போதுதான் நெனக்கிறோம். அப்பவே செத்திருக்கலாம்னு...
கஜா புயல் : மாந்தோப்பு விவசாயியின் கண்ணீர்
மாங்காய வாங்க வர்ற வியாபாரிகிட்டேகூட இதுவர கடன் கேட்டதில்ல; இப்ப எப்படா நிவாரணம் வருமுன்னு ஏங்கிகிட்டிருக்கோம்.
கஜா புயல் : தூய்மைப் பணியாளர்களின் அர்ப்பணிப்புமிக்க உழைப்பு
இத தாழ்ந்த வேலையா பாப்பாங்க இல்லையா.. நாங்க யார் உதவியும் எதிர்பாக்குறது இல்ல. நம்ம வேலையா நாம சரியா செய்யனும் அதுக்குதானே வந்து இருக்கோம்.
பட்டுக்கோட்டை : 52 கோழி பண்ணைகள் அழிவு ! என்ன கடன் வாங்குனாலும் மீள முடியாது !
தென்னந்தோப்புல கோழிப்பண்ணை அமைக்கிற பழக்கம் இருபது வருஷமாவே நடைமுறையில இருக்கு. இதுதான் அவர்களின் வாழ்க்கை. வீடு, பண்ணைனு தினந்தோறும் இதிலேயே உழலக்கூடியவர்கள். இனி ?
கஜா புயல் : தென்னை விவசாயிகள் மட்டுமல்ல தேங்காய் வியாபாரிகளும் தப்பவில்லை !
வியாபாரி - விவசாயம் எல்லாம் முடிந்து விட்டது. தோப்புக்காரர்களுக்கு அட்வான்ஸ் சில இலட்சங்கள் கொடுத்திருக்கிறோம். தென்னையே அழிந்துவிட்ட பிறகு அதையெல்லாம் எப்படி வசூலிப்பது என்று தெரியவில்லை.
கஜா புயல் : எங்களுக்கு மட்டும் ஆசையா இப்படி ரோட்டுல நின்னு சாப்பிடுவதற்கு !
அரசாங்கம் எங்களுக்கு சொன்ன நிவாரணத்த இன்னும் தரவே இல்ல... அத குடுத்தாக்கூட நாங்க வீட்டுலயே சமச்சி சாப்பிட்டுகிட்டு இருப்போம்.
கஜா புயல் : எங்க ஓட்டு செல்லும் போது எங்க உயிர் மட்டும் செல்லாதா ?
கஜா புயல் தென்னை, வாழை விவசாயிகளை மட்டுமல்ல… இலட்சக்கணக்கான கூலித்தொழிலாளர்களின் வாழ்க்கையையும் திசை தெரியாமல் புரட்டு போட்டுள்ளது!
ஏரிப்புறக்கரை : புயல்ல வீடு போனது பிரச்சினையில்லை படகு போனதுதான் கவலையா இருக்கு
கடலுக்கு போற ஒருத்தனுக்கும் யாருமே துணை இல்ல. அவனோட வாழ்க்கையே அதுலதான் இருக்கு அப்படின்னு எந்த அரசும் சிந்திக்காது. இது வரைக்கும் சாப்பாடே முறையா தரல. இவனுக என்ன பண்ணிடப்போறனுங்க?
அதிராம்பட்டினம் கஜா பாதிப்பு : ஏழை முசுலீம் – தலித்துன்னு எங்கள ஒதுக்குறாங்களோ ?
கொஞ்சம் யோசிச்சு பாருங்க சார் தமிழகத்துல ஏழு மாவட்டங்கள் மட்டும் தான் இந்த புயலால பாதிச்சு இருக்கு. கிட்டத்தட்ட ஒருவாரம் ஆகப் போவுது எந்த நிவாரணப் பணியும் வேகமா நடக்கல.