Saturday, April 19, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு களச் செய்தியாளர்

வினவு களச் செய்தியாளர்

வினவு களச் செய்தியாளர்
323 பதிவுகள் 0 மறுமொழிகள்

திருமங்கலம் டோல்கேட்டின் அடாவடித்தனம் – முற்றுகையிட்ட கிராம மக்கள்

சட்ட விதிமுறைகள் மீறப்பட்டுள்ள நிலையில் அதற்கு எதிராக டோல்கேட் எதிர்ப்பு குழு என்ற ஒன்றை உருவாக்கி திருமங்கலம் வியாபாரிகள், அனைத்து வாகன ஓட்டிகள் சங்கம் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயப் படுகொலைகள் | உண்மை அறியும் குழு அறிக்கை

கருணாபுரம் பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும்பாலானோர் அன்றாடம் உழைக்கும் தலித் மக்கள். பெரும்பாலும் நிரந்தர வேலை ஏதுமற்ற அன்றாடம் காய்ச்சிகளாகத் தான் வாழ்கின்றனர்.

சட்டப்பூர்வமாக்கப்பட்ட தனியார் ஆம்னி பேருந்து வழிப்பறி | நேரடி அனுபவம்

தொலைதூரத்திற்கு செல்லும் அரசு பேருந்துகளை விட ஆம்னி பேருந்துகள் மூன்று மடங்கு அதிகம். அனைத்து மக்களும் மலிவாக பயன்படுத்தக்கூடிய அரசு பொது போக்குவரத்தை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கி தனியார் பேருந்துகள் வளர்ந்து வருகின்றன.

கள்ளிக்குடி: கோழிக்கழிவுகளை மக்கச் செய்யும் ஆலையை நிரந்தரமாக மூடு!

கடந்த நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஆறு கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டம் நடத்தி உள்ளனர். குறிப்பாக நச்சு வாயுவின் தாக்கம் அதிகமாக உள்ள சென்னம்பட்டி, பேய்குளம் ஆகிய கிராமங்களில் ஒரு ஓட்டு கூட செலுத்தவில்லை.

தேர்தலை புறக்கணிக்கும் கீழ மூவக்கரை மீனவ கிராம மக்கள்

"எங்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தந்த பிறகே நாங்கள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்போம்; இல்லை என்றால் நாங்கள் தேர்தல் தேதி அன்று வாக்களிக்க போகாமல் வீட்டிலேயே இருக்கப் போகிறோம்” என்று மக்கள் தங்கள் முடிவு குறித்துக் கூறியுள்ளனர்.

சாலைகளே இல்லாத கிராமங்களுக்கு தேர்தல் எதற்கு? தேர்தலைப் புறக்கணிக்கும் ஏர்வாடி மக்கள்

இந்தியா கூட்டணி கட்சிகள் மக்கள் பிரச்சினைகளைத் தங்களின் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக் கொள்ளாவிட்டால் அது அவர்களுக்கு பின்னடைவாகவே அமையும்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் தொடர் போராட்டம்

தற்போது இரண்டு மாதங்களாக ஊதியத்தை நிறுத்தி வைத்துள்ளனர். ஆசிரியர் இல்லாத பணிகளில் 650 பேர், ஆசிரியர்கள் 500 பேர் மற்றும் ஓய்வூதியம் பெறக்கூடியவர்கள் என மொத்தமாக மாதத்திற்கு கிட்டத்தட்ட 12 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.

மானாமதுரை பேருந்து நிறுத்தம்: மக்களை அலையவிடும் அதிகார வர்க்கம்!

மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் எனக் கேட்டால் மாதக்கணக்கில் அலையவிடும் இந்த அதிகாரிகள், பணம் படைத்தவர்களிடமும் கார்ப்பரேட்டுகளிடமும் எப்படி வாலாட்டுகிறார்கள் என்பதை நாம் தினமும் பார்த்துதான் வருகிறோம்.

கொட்டும் மழையிலும் “FREE PALESTINE” | பேரணி | சென்னை

உழைக்கும் வர்க்கம், நடுத்தரவர்க்கம், மேல் தட்டு நடுத்தர வர்க்கம் என அனைவரும் ஒரே குரலில் முழங்கினார்கள் "SAVE PALESTINE" என்று.

இடைநிலை – பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டத்தை ஆதரிப்போம்!

ஆசிரியர்கள் போராட்டம் என்பது திமுக அரசு தங்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்ற அடிப்படையில் தான் முன்னெடுக்கப்படுகிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஐ ஜாலி ஸ்கூலுக்கு போ.. போறோம் | கள அனுபவம்

எனது இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கிய இரு சிறுவர்களில் ஒருவன் "ஐ  ஜாலி ஸ்கூலுக்கு போ.. போறோம்" என்று சொல்லி வண்டியில் இருந்து குதித்தான். இதோ அடுத்தநாள் பள்ளியில் மகிழ்ச்சியாக காலை உணவு அருந்தி கொண்டிருக்கிறார்கள்.. அந்தத் தாயும் அளவில்லா மகிழ்ச்சியில் எனக்கு நன்றி சொன்னார்.

“நியூஸ்கிளிக்” மீதான அடக்குமுறை: பத்திரிகையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

இன்று (07-10-2023) நியூஸ்கிளிக் செய்தி நிறுவனத்தின் மீதான பாசிச அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, “நெட்வொர்க் ஆப் விமன் இன் மீடியா – இந்தியா” (Network of Women in Media – India -NWMI) சார்பில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

IPC, CrPC, IEA சட்ட வரைவு மசோதாக்களை எதிர்த்து வழக்கறிஞர்கள் பேரணி!

சட்ட திருத்தத்திற்கும், இ-பைலிங் முறைக்கும் எதிராக ஜாக் பொதுக்குழுவால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதன் அடிப்படையில் தமிழக வழக்கறிஞர்கள் அணி திரண்டு போராட்டம் நடத்தி இருப்பது தமிழக வழக்கறிஞர் மத்தியில் மிகப்பெரிய நம்பிக்கையும் எழுச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

அரசு நிர்வாகத்தின் துணையோடு ஆசிரியர் பணி வழங்குவதாக நீம் பவுண்டேசன் மோசடி!

ஆசிரியர்களிடம் நீம் பவுண்டேசனில் உறுப்பினராக சேருவதற்கும், சிறப்பு பயிற்சி எடுப்பதற்கும் ரூ. 50,000 கட்டினால், மாதம் ரூ. 15,000 சம்பளத்துடன் வேலை கிடைக்கும் என்று கூறியுள்ளனர்.

அக்கலாம்பட்டி: சுடுகாடு இல்லாமல் ஒடுக்கப்படும் அருந்ததிய மக்கள்!

சுடுகாடு மட்டுமல்ல, அக்கலாம்பட்டி பகுதி  அருந்ததிய மக்களுக்கு வீட்டுமனை, குடிநீர் என எந்த அடிப்படை வசதியையும் முறையாக செய்து கொடுக்காமல் அரசு புறக்கணித்து வரும் அவலம் நீடிக்கிறது.