Monday, April 21, 2025

தி கேரவன் பத்திரிகையின் கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் பாசிச மோடி அரசை கண்டிக்கின்றோம்!

2023 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப விதிகள், செய்தி இணையதளங்கள் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்களில் வெளியான கட்டுரைகளை சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு தெரிவிக்காமலேயே அகற்ற தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திற்கு அவசரக்கால அதிகாரங்களை வழங்கியுள்ளது.

ரஃபா எல்லை: இது இன்னொரு முள்ளிவாய்க்கால்!

பாசிஸ்டான இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்கள் இஸ்ரேலில் நடந்து கொண்டிருக்கும் போதும் கூட, இன அழிப்புப் போரை நிறுத்தாமல் தொடர்ந்து நடத்தி வருகிறார்.

பாசிச மோடியின் ஆட்சியை வீழ்த்த டெல்லியை முற்றுகையிடும் விவசாயிகளை வரவேற்போம்!

மக்கள் அதிகாரம் நீதி கேட்டுப் போராடும் விவசாயிகளை வரவேற்கிறது. விவசாயிகளின் போராட்டத்திற்கு இந்த நாட்டு மக்களின் ஆதரவு எப்போதும் உள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் மக்கள் போராட்டங்களை உருவாக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

நேற்று அயோத்தி ! இன்று ஞான வாபி ! தொடரும் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள் !

மோடியின் பாசிச நடவடிக்கையை இனி ஒருபோதும் நீதிமன்றங்கள் மூலம் தடுத்து நிறுத்த முடியாது. மாபெரும் மக்கள் போராட்டங்களை கட்டியமைப்போம்! ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க; அம்பானி -அதானி பாசிச கும்பலுக்கு முடிவு கட்டுவோம் என்று மக்கள் அதிகாரம் அறைகூவி அழைக்கிறது.

ஹேமந்த்  சோரன் கைது ! வெறி பிடித்து அலையும் மோடி அரசு !

02.02.2024 ஹேமந்த்  சோரன் கைது ! வெறி பிடித்து அலையும் மோடி அரசு ! பத்திரிகைச் செய்தி ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் நேற்றைய தினம் தனது பதவியை இராஜினாமா செய்தார்.அன்றைய தினமே அவர் அமலாக்கத்துறையில்...

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை | மக்கள் அதிகாரம் கண்டனம்!

தமிழ்நாட்டில் 6-க்கும் மேற்பட்ட இடங்களில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை செய்த சோதனையை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது.

January 22: Inauguration of Ram Temple! Key to Hindu Rashtra!

People's Power asks the people to raise their voice on January 22 against this injustice done to the Muslims and against the Modi - Amit Shah fascist mob that is turning the country into a Hindu Rashtra, and act as a bulwark against fascism in Tamil Nadu.

ஜனவரி 22: ராமர் கோயில் திறப்பு விழா! இந்துராஷ்டிரத்திற்கான திறவு கோல்!

இஸ்லாமிய மக்களுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதிக்கு எதிராக, இந்த நாட்டை மோடி - அமித்ஷா பாசிச கும்பல் இந்துராஷ்டிரத்தின் நுழைவாயிலுக்கு இழுத்துச் செல்வதற்கு எதிராக ஜனவரி 22 ஆம் தேதி அனைவரும் குரல் எழுப்புவோம்

பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களின் உடனடி கோரிக்கையை தமிழக அரசே  நிறைவேற்று!

பாதிக்கப்பட்ட மக்கள் வீட்டில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு தற்காலிக முகாம்களை அமைத்து உணவு, உடை, தங்குமிடம் ஆகியவற்றை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும்.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் குற்றம் சாட்டப்பட்ட சைலேஷ் குமார் யாதவ் டிஜிபியாக பதவு உயர்வு!

அருணா ஜெகதீசன் அறிக்கை யாரைக் குற்றவாளி என்று சுட்டிக் காட்டியதோ அவர்கள் எல்லாம் பதவி உயர்வு பெற்றுக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இப்போது வரை ஸ்டெர்லைட்டை மூட வேண்டும் என்று போராடுவதற்கும் பேசுவதற்கும் கூட தூத்துக்குடியில் உரிமை இல்லை.

முருகப்பா – கோரமண்டல் இன்டர்நேஷனல் உரத் தொழிற்சாலையை நிரந்தரமாக இழுத்து மூடு!

அம்மோனியா கசிவுக்கு காரணமான முருகப்பா இன்டர்நேஷனல் உரத் தொழிற்சாலையை நிரந்தரமாக தமிழ்நாடு அரசு மூட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்த ஆலையிலிருந்து இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தூத்துக்குடி பெரியார் மையத்தின் மீது தாக்குதல் – RSS, BJPயை தடை செய்!

இன்று (26.12.2023) பெரியார் மையத் தோழர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படாமலேயே போலீசு பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. காலை 8 மணியளவில் சுமார் 20-க்கும் மேற்பட்ட காவிக் கும்பல் கையில் அரிவாளுடன் மையத்திற்குள் நுழைந்து காப்பாளர் போஸ், தோழர் செல்வராஜ் ஆகியோரை தாக்கியது.

மேல்மா சிப்காட் எதிர்ப்பு போராட்டம் | உண்மை அறியும் குழுவின் அறிக்கை | பாகம் 4

பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களிலிருந்து உண்மை அறியும் குழுவானது கண்டறிந்த முடிவுகள் ஜூலை 2 - 2023 முதல் மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற போராட்டங்கள் ஜனநாயக முறையிலானவையே....

மேல்மா சிப்காட் எதிர்ப்பு போராட்டம் | உண்மை அறியும் குழுவின் அறிக்கை | பாகம் 3

சிப்காட் வேண்டும் என்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் விசாரித்தபோது, 100 நாள் வேலை வேண்டுமென்றால் அவசியம் ஆர்ப்பாட்டத்திற்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்தி அழைத்து வந்ததாகவும் தெரிவித்தனர். ரூ 200 பணம் தருவதாகவும் பிரியாணி பாக்கெட் தருவதாகவும் சொல்லி அழைத்து வந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேல்மா சிப்காட் எதிர்ப்பு போராட்டம் | உண்மை அறியும் குழுவின் அறிக்கை | பாகம் 2

எங்களது நிலங்கள் கையகப்படுத்துவது தொடர்பான எவ்வித அறிக்கையும் வரவில்லை, பேச்சுவார்த்தையும் இதுவரை நடைபெறவில்லை. இவ்வூரைச்சேர்ந்தவர் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்ற போதுதான் அங்கிருந்த அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பினைப் பார்த்து எங்களிடம் கூறினார்.

அண்மை பதிவுகள்