Tuesday, April 22, 2025

ஒடிசா ரயில் விபத்து: மறுகாலனியாக்கத்தின் கோரமுகம்!

தண்டவாளப் பராமரிப்பு ஊழியர்கள் 4 லட்சத்திலிருந்து 2 இலட்சமாகக் குறைந்துள்ளார்கள். ரயில்வே துறையில் 3.12 லட்சம் காலிப்பணியிடங்கள் இருப்பதாக ஒன்றிய அரசே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது; இவற்றுள் பெரும்பாலானவை பாதுகாப்பு தொடர்பான பணிகளாகும்.

கழன்றது முகமூடி | பகுதி 1

‘வளர்ச்சி’ முகமூடி கிழிந்து தொங்கும் நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வென்று இந்துராஷ்டிரம் அமைப்பதை நோக்கி முன்னேற வேண்டுமானால் தேசவெறி, மதவெறி நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதைத் தவிர ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலுக்கு வேறுவழியில்லை.

அமுல் விரிவாக்கத்துக்குப் பின்னே அம்பானியின் ஏகபோக விருப்பம்!

கடந்த ஜனவரி மாதத்தில் அமுல் நிறுவனத்தில் கிட்டதட்ட 40 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து அனுபவம் பெற்ற, பல ஆண்டுகளாக மேலாண்மை இயக்குனராக பணியாற்றிய ஆர்.எஸ்.சோதி தன் பதவியை ராஜினாமா செய்து அமுல் நிறுவனத்தில் இருந்து வெளியேறினார். அவர் தற்போது அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தில் இணைந்துள்ளார்.

கர்நாடக தேர்தல் முடிவுகள்: தேர்தல் தோல்வி மட்டுமே பாசிசத்தை அளக்குமா?

கர்நாடகாவில் இந்துத்துவா இன்னும் முதல் கட்டத்திலேயே - அதாவது குழந்தைப் பருவத்திலேயே உள்ளது” என்கிறார் மைசூர் பல்கலைக்கழக கலைத்துறையின் தலைவரான முசாபர் அசாதி. கடலோர கர்நாடகத்தைத் தவிர, ஒட்டுமொத்த கர்நாடகத்தை எடுத்துக் கொண்டால், முசாபர் அசாதி குறிப்பிடுவதுதான் உண்மையாகும்.

டெல்லி அரசின் நிர்வாக அதிகாரம் பறிப்பு: மோடி அரசின் சட்டப்பூர்வ பாசிச நடவடிக்கை!

டெல்லியில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட யூனியன் பிரதேச அரசிடம் இருந்து மோடி அரசால் சட்டப்பூர்வமாகவே பறிக்கப்பட்டுள்ளது. இது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு எதிரான மோடி அரசின் சட்டப்பூர்வ பாசிச நடவடிக்கை ஆகும்.

எரிகிறது மணிப்பூர்: பற்றவைத்தது காவி!

பிரேன் சிங் முன்னிறுத்தும் மேய்தி பெரும்பான்மைவாதமானது ஒருபக்கம், குக்கி-மேய்தி மக்களுக்கிடையிலான பிளவை ஏற்படுவத்தி காவிக்கும்பலுக்குச் சேவைசெய்வதாகவும்; மற்றொருபுறம் மணிப்பூரின் மலைவளங்களை கார்ப்பரேட்டுக்கு சூறையாடக் கொடுப்பதற்கான தரகுவேலையாகவுமே அமைந்திருக்கிறது.

பாசிசத்திற்கு எதிரான கலகக் குரல்கள்!

பாசிஸ்டுகள் ஏறித்தாக்கி வரும் இச்சூழலில் நாம் அவர்களைக் கண்டு அஞ்சக்கூடாது. பாசிசக் கொடுமைகளை சகித்துக்கொண்டு அமைதியாக இருக்கக்கூடாது. இதுதான் நேஹா சிங் ரத்தோர் போன்ற கலைஞர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது.

ரத்தினகிரி மீது பாசிச அடக்கமுறையை ஏவும் பா.ஜ.க – பின்னணியில் அதானி!

இந்திய பொதுத்துறை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களின் கூட்டமைப்பு சவூதி அராம்கோவுடன் இணைந்து இச்சுத்திகரிப்பு ஆலையை நிறுவ வேண்டுமென்றால், அதானி குழுமத்தை எந்த வகையிலாவது தங்களுடைய கூட்டுப் பங்குதாரராக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மோடி அரசு நிச்சயமாக டீல் பேசும்.

மலியானா படுகொலை குற்றவாளிகள் விடுதலை: தொடரும் இந்துராஷ்டிர (அ)நீதி!

தற்போது உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி, வெளிப்படையாக இந்துராஷ்டிர ஆட்சி என்று மட்டும்தான் அறிவிக்கப்படவில்லை. எனவே, இந்துராஷ்டிரத்தில் மலியானா படுகொலை குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியாது.

பாசிஸ்டுகளின் துருப்புச் சீட்டாகும் இடஒதுக்கீடு: சங்கப்பரிவாரங்களும் தம்பிமார்களும்!

பார்ப்பன-உயர்சாதி மேலாதிக்கத்திற்கு எங்கே பங்கம்வந்துவிடுமோ என்று ஒருகாலத்தில் இடஒதுக்கீட்டை எதிர்த்த ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க, இன்று சமூகநீதி வேடம்போடுகிறது.

காவிகளின் கற்பனைகளை பொடியாக்கிய, கர்நாடக உழைக்கும் மக்கள்!

மறுகாலனியாக்கக் கொள்கைகளையும் இந்துத்துவ பாசிசத்தையும் வீழ்த்தும் பாதை தேர்தலுக்கு வெளியே வர்க்கப் போராட்டக்களத்திலும் மக்கள் எழுச்சியை உருவாக்குவதிலும் உள்ளது. கர்நாடக உழைக்கும் மக்களை அதை நோக்கி வழிநடத்திச் செல்ல வேண்டியது புரட்சிகர சக்திகளின் பொறுப்பாகும்.

திரிபுரா, நாகலாந்து, மேகலாயா தேர்தல் முடிவுகள்: எச்சரிக்கை, பரவிவருகிறது பாசிசம்!

அதிகாரத்தைப் பயன்படுத்தி, அராஜகவாதிகள் மட்டுமே வெற்றிபெற வழிவகுக்கும் இந்த போலி ஜனநாயகத் தேர்தல்களில் பா.ஜ.க.வை வீழ்த்திவிட முடியும் எனக் கருதுவதும், அந்த வெற்றிகளைக் கொண்டே பாசிஸ்டுகளை வீழ்த்திவிடலாம் எனக் கருதுவதும் பாசிஸ்டுகளின் வெற்றிக்கே வழிவகுக்கும் என்பதுதான் நடந்து முடிந்த மூன்று மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நமக்கு உணர்த்துகின்றன.

சர்வதேசச் சட்டங்கள் அனுமதி : பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் கட்டற்ற சுரண்டலுக்கான திறவுகோல்!

நமது நாட்டின் இயற்கை வளங்களையும், நமது தொழிலாளர்களின் உழைப்பையும் எவ்வித நெறிமுறையுமின்றி உறிஞ்ச பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நமது நாட்டை திறந்துவிடுவதுதான் பார் கவுன்சில் கொண்டுவந்துள்ள புதிய விதிமுறைகளின் நோக்கமாகும்.

இது பாசிஸ்டுகளுக்கான ‘ஜனநாயகம்’! பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுக்காக போராடுவோம்!

இனியும் “அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்போம்” என்று முழங்குவது இல்லாத ஜனநாயகத்திற்காக அழுவதாகும். இதை விடுத்து, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசக் கும்பலை வீழ்த்தி பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு ஒன்றை அமைப்பதற்காகப் போராடுவதுதான் நாம் முன்னெடுக்க வேண்டிய கடமையாகும்.

‘இலவச’ எதிர்ப்பும் சமூக நலத்திட்ட ஒழிப்பும்!

தனியார்மயம் – தாராளமயம் – உலகமயக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி நாட்டையே கார்ப்பரேட் முதலாளிகளின் வேட்டைக்காடாக மாற்றுவது; சேவைத்துறைகளைத் தனியார்மயமாக்குவது; நலத்திட்டங்கள் அனைத்தையும் முற்றாக நிறுத்துவது என்ற போக்கில் நாட்டை மறுகாலனியாக்குவதே ஆளும் வர்க்கங்களின் திட்டமாகும்.

அண்மை பதிவுகள்