கோவையில் தடையை மீறி மாட்டுக்கறி திருவிழா !
மோடியின் மதவெறியை அம்பலப்படுத்தும் முழக்கங்களை பொறுக்க முடியாத போலீசு அவசர அவசரமாக கைது செய்ய முயற்சித்தது, ஆனால் தோழர்கள் கட்டுக்கு அடங்காமல் தொடர்ந்து கைதாக மறுத்து முழக்கமிட்டனர்.
காக்கைக் குருவி போல விவசாயிகள் சுட்டுக் கொல்லும் மத்திய பிரதேச அரசு !
ரிசர்வ் வங்கி விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய முடியாது என அறிவித்தது. தமிழக விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய முடியாது என பா.ஜ.க. பினாமி தமிழக அரசு உச்சநீதிமன்றம் செல்கிறது. இதன் அடுத்தக்கட்டத்திற்கு சென்று விவசாயிகளைச் சுட்டுக் கொன்றுள்ளது சவுகான் அரசு.
கோவை : போலீசா – மக்களா? டாஸ்மாக்கை மூடிய போராளிகள் !
அன்றாடங்காய்சியான எங்கள் இடத்தில் டாஸ்மாக்கை திறக்கும் அரசு அதையே கலெக்டர் ஆபிசுலயோ அல்லது போலீஸ் ஸ்டேசன்லயோ கடைய திரக்கறது தானே எனக் கேட்டார். வயதில் முதியவர் என்று கூட பார்க்காது அவரை “என்ன லூசு மாதிரி பேசுற?” என போராடும் மக்களை அவமானப்படுத்தியது போலீசு.
டாஸ்மாக்கை மூடு : திருச்சி, போடி, கோத்தகிரி, ஓலையூர் போராட்டங்கள் !
பெண்களின் கலகக்குரலுடன் இணைந்த பறையிசையும், தோழர்களின் உணர்வுப்பூர்வமான முழக்கங்களும் மொத்தக்கூட்டத்தையும் டாஸ்மாக்கை நோக்கி முன்னேற வைத்தது. போராடும் மக்களை தடுக்க முடியாமல் தினறியது போலீசு !
தமிழகத்தை ஆள்வது டெல்லியா ? சென்னையா ?
உள்நாட்டு கால்நடை சந்தைகளை அழித்து அந்நிய கார்ப்பரேட் கம்பெனிகளின் மாட்டிறைச்சி, பால்பொருள்களை தாராளமாக இறக்குமதி செய்யவே மோடி அரசின் சதித்தனமான இந்த மாட்டு விற்பனை தடை உத்தரவு ஆகும்.
ஓசூர் சப்படி – காமன் தொட்டி டாஸ்மாக் கடைகளை மூட வைத்த பெண்கள் !
"இவ்வளவு தூரம் வந்து விட்டோம், தாசில்தாரிடம் மனு கொடுத்து விடலாம்" என்று தாசில்தாரிடம் மக்கள் சென்றனர். மக்கள் அதிகாரம் தோழர்கள் சொன்னதை அப்படியே வார்த்தை மாறாமல், ''எனக்கு அதிகாரம் இல்லை எல்லாம் கலெக்டர் தான்" என்று தாசில்தார் மக்களுக்கு புரிய வைத்தார்.
இந்துத்துவப் பிணந்தின்னிகளுடன் நாம் சேர்ந்து வாழ இயலுமா ?
“தென்னிந்திய கருப்பர்களுடன் நாங்கள் சேர்ந்து வாழவில்லையா?” என்று தருண் விஜய் சொன்னது உங்களுக்கு நினைவிருக்கும். இந்தக் காவி காட்டுமிராண்டிகளுடன் மனிதர்களாகிய நாம் சேர்ந்து வாழ இயலுமா?
சோமபானத்துக்கும் சுவயம் சேவக்குக்கும் போலீசு காவல் !
மக்களை சீரழிக்கும் மதவெறிப் போதைக்கும் சரி டாஸ்மாக் போதைக்கும் சரி பாதுகாப்பளிப்பது காவல் துறையே. இவை இரண்டுக்கும் தமிழ்கத்தில் கல்லறை எழுப்புவோம் !
காரல் மாக்ஸ் பற்றி பேசினால் சட்டம் ஒழுங்கு கெடுமாம் !
கோவையில் காவலர் பணித் தேர்வுகள், ஐந்து கல்லூரிகளின் ஆண்டுவிழா, எஸ்.பி.பி பாட்டு கச்சேரி, இவை எல்லாவற்றையும் மீறி எங்கு மக்கள் டாஸ்மாக்கை உடைப்பார்கள் எனத் தெரியவில்லை. இதனால் தான் அனுமதி மறுக்கிறோம் எனக் கூறினர் காவல் துறையினர்.
யார் தீவிரவாதி ? தருமபுரி பாலக்கோட்டில் தூளான டாஸ்மாக் கடை !
உச்சநீதிமன்ற உத்தரவை மீறி டாஸ்மாக் கடை செயல்படுவதை அறிந்த மக்கள் 13.05.2017 அன்று காலை 10 மணியளவில் கடையின் பூட்டை உடைத்து மது பாட்டில்களை எடுத்து வெளியே வீசி உடைத்து போராட்டம் நடத்தினர்.
பொய் வழக்குகளுக்கு அஞ்சமாட்டோம் ! கரூர் மக்கள் அதிகாரம்
அ.தி.முக.வின் அடிவருடியும், மணல் மாஃபியாவின் கூட்டாளியுமான கரூர் மாவட்ட காவல் துறையினர் மக்கள் அதிகாரம் பிரச்சாரம் செய்வதை பல வழிகளில் தடுக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள். இருப்பினும், எத்தனை இன்னல்கள், எத்தனை பொய்வழக்குகள் வந்தாலும் ஓயமாட்டோம்.
ஓசிக்குச் சோறு போடலைன்னா லாடம் கட்டும் – குஜராத் போலீசு !
நோடியா குடும்பத்தில் உள்ள ஆண்களில் பெரும்பான்மையானோர், நீதிமன்ற உத்தரவுப்படி வெளியூரில் வீடெடுத்து தங்கியிருப்பதால் அவர்களால் உணவகங்களை நடத்த முடிவதில்லை. கிட்டத்தட்ட அவர்களது வாழ்வாதாரங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுவிட்டன.
தமிழகமெங்கும் மே நாள் போராட்டங்கள் – செய்தித் தொகுப்பு 1
”8-மணி நேர வேலை என்பது இப்போது எங்கும் இருப்பதில்லை, ஏன் இங்கிருக்கும் காவல் துறையினருக்கே இந்த நிலைமை தான், அவருக்கும் இந்த செங்கொடி போட்ட தோழர்கள் தான் போராட வேண்டியிருக்கிறது”
திருத்துறைப்பூண்டி : டாஸ்மாக்கை மூடச் சொல்வது வன்முறையாம் !
மக்கள் போர்கோலம் பூண்டு சாலைகளில் அணிதிரள்வது மிகச்சாதாரண நிகழ்வுகளாக மாறிக் கொண்டுள்ள சூழ்நிலையில் மக்கள் அதிகாரம் போன்ற அமைப்பைக் கண்டு அதிகார வர்க்கம் அஞ்சுவது வழமையான ஒன்றுதான்.
கடலூர் – அரியலூரில் டாஸ்மாக் முற்றுகை ! மக்கள் அதிகாரம்
கடையை திறந்த மூன்று நாட்களுக்குள்ளே 30 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள உளுத்தூர் பேட்டையில் இருந்து கூட வந்து மது பாட்டில்களை வாங்கி செல்வது வேதனை அளிக்கிறது என மக்கள் தங்கள் குமுறலை வெளிப்படுத்தினர்.