கார்ப்பரேட்டுக்களுக்காக தமிழ்நாட்டைச் சூறையாடும் பாசிச பாஜக அரசு! காவல்காக்கும் திமுக அரசு!
எண்ணூர் அனல் மின்நிலைய விரிவாக்கம், காட்டுப்பள்ளித் துறைமுகம், பரந்தூர் விமான நிலைய விரிவாக்கம் என கார்ப்பரேட்டுகளின் காவலாளியாக செயல்படும் திமுக அரசு, அணுக்கனிம சுரங்கம் மற்றும் எண்ணெய் - எரிவாயு திட்டத்தை ஒருபோதும் தடுத்து நிறுத்தாது.
மோடி பதவியேற்பதை ஏற்கவைக்கும் தி.மு.க-வின் துரோகத்தனம்!
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போதுவரை மோடி பதவியேற்பது பெரும்பான்மை இந்திய மக்களின் உணர்வுக்கு எதிரானது என்று வாய்த் திறக்கவில்லை.
செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரம் ஊழல்: அம்பலப்பட்ட பாசிச பா.ஜ.க அரசு!
பார்தி நிறுவனத்திடம் கையூட்டு பெற்றுக்கொண்டு ஏலம் / டெண்டர் முறை இல்லாமல் செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரம் வழங்க சட்ட வழிவகையை உருவாக்கியுள்ளது பாசிச பா.ஜ.க அரசு.
தேர்தல் நிதிப் பத்திரங்கள்: பா.ஜ.க.வின் பாசிச வழிகளில் ஒன்று!
மற்ற காட்சிகளைப்போல கார்ப்பரேட் நலனை வெறுமனே முன்னிலைப்படுத்துவது மட்டுமல்ல பா.ஜ.க.வின் அரசியல் இருப்பு, பா.ஜ.க என்ற பாசிச கட்சி அதன் சொந்த இருப்பிலே பாசிசத்தன்மையானது.
விவசாயிகள் போராட்டமும் எதிர்க்கட்சிகளின் சந்தர்ப்பவாதமும்
மோடி-அமித்ஷா கும்பலுக்கு எதிராக ஒன்றிணைவதாகக் கூறிக்கொள்ளும் எதிர்க்கட்சிகள், விவசாயிகள், உழைக்கும் மக்களின் உரிமைப் போராட்டங்களை ஆதரித்து அவர்களுக்கு உதவுவதற்குப் பதிலாக, மோடி-அமித்ஷா கும்பல் உருவாக்கியுள்ள, “பொம்மை” நாடாளுமன்றத்தில் வாதப் “போரில்” ஈடுபட்டு தங்களது எதிர்ப்பைக் காட்டுவதாக நாடகமாடுகின்றனர்.
மோடி செல்ஃபி பாயிண்ட்: மக்களின் வரிப்பணத்தில் படாடோப விளம்பரம்!
வெள்ள நிவாரண நிதி கேட்டால் பல்வேறு உருட்டுகளை உருட்டிக் கொண்டிருக்கும் நிர்மலா - மோடி கும்பல் சுய விளம்பரத்திற்காக மக்களின் வரிப் பணத்தை அள்ளி இறைத்துக் கொண்டிருக்கிறது. இவர்கள் எந்தவிதமான கூச்ச நாச்சமும் அற்றவர்கள்.
எதிர்க்கட்சிகளே! ராகுல் காந்தி போராளிகளின் பக்கம் இருக்கிறார்! நீங்கள் எங்கே நிற்கிறீர்கள்?
இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு ஜால்ரா போடுகின்ற குழப்பக்காரர்கள், ஐயோ தாக்குதல், ஐயோ பயங்கரவாதம் என்று கூவிக் கொண்டிருந்தார்களே! பாவம் இப்போது என்ன செய்யப் போகிறார்கள்?
பா.ஜ.க. முதலமைச்சர்கள் நியமனம்: சாதி + ஆர்.எஸ்.எஸ். பின்னணி
பெரும்பாலும் அனைத்து சாதிகளிலும் முதல்வர்கள் மற்றும் சபாநாயகர்களை நிறுத்தியுள்ளதன் மூலம் பெரும்பான்மை மக்களின் வாக்குவங்கியை குறிவைத்துள்ளது, பா.ஜ.க. ஐந்து மாநில தேர்தல் பிரச்சாரத்தின்போது காங்கிரஸ் கையிலெடுத்த சாதிவாரிக் கணக்கெடுப்பு அரசியல் மூலம் தற்காப்பு நிலைக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க., இந்நியமனங்கள் மூலம் அந்த அரசியலை எதிர்கொள்ள முயற்சிக்கிறது.
ஆரம்பத்திலேயே ஆட்டம் கண்ட அண்ணாமலையின் யாத்திரை!
ராமநாதபுரம் முழுவதும் ”என் மண் என் மக்கள்” யாத்திரையைக் கண்டித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அதில், ”பற்றி எரியும் மணிப்பூர் உங்கள் மண் இல்லையா?” என்று அண்ணாமலையைப் பார்த்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
திமுக அரசின் கார்ப்பரேட் ஆதரவு திட்டமும், RSS-BJP-யின் தொழிற்சங்கப் பிரிவான BMS-ன் எதிர்ப்பும்!
பாசிச பாஜக-வை முறியடிப்பதுதான் இன்று நமது இலக்கு; அதனால் திமுக உள்ளிட்ட மாநில கட்சிகளை விமர்சித்தால் பாஜக உள்ள வந்துவிடும் என்று, திமுக அரசின் கார்ப்பரேட் நலத் திட்டங்களை எதிர்க்காமல் விட்டால் BMS போன்ற பாசிச சக்திகள்தான் வளர்ச்சியடையும்.
கார்ப்பரேட் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கப்போகும் திராவிட மாடல் அரசாங்கம்!
ஒன்றிய பா.ஜ.க தலைமையிலான அரசாங்கம் கொண்டு வர முயற்சி செய்து, விவசாயிகளின் போர்க்குணமிக்க போராட்டத்தால் முறியடிக்கப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை மறைமுகமான வழியில் கார்ப்பரேட் நெல் கொள்முதல் நிலையம் என்ற பெயரில் திராவிட மாடல் அரசாங்கம் அறிமுகம் செய்ய உள்ளது.
செந்தில் பாலாஜி கைது! THE UNCONDITIONAL SUPPORT அரசியல்!
நிபந்தனை விதிப்பதே பாசிசத்திற்கு பலம் சேர்க்கும் என்கிறார்கள். மாநில சுயாட்சி உரிமை, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க தடை, அம்பானி- அதானி பாசிச கும்பல் மீது நடவடிக்கை ஆகிய எவ்வித நிபந்தனையுமின்றி காங்கிரசுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்கிறார்கள்.
கர்நாடகா தேர்தல் முடிவுகள்: இந்துத்துவம் தோற்றுவிட்டதா?
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க மதவெறி பிரச்சாரங்களை அதிக அளவில் மேற்கொண்ட உடுப்பி, ஸ்ரீரங்கப்பட்டணா, சிவமோக்கா ஆகிய பகுதிகளில் பா.ஜ.க-வின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது.
ஒப்பந்த செவிலியர்களின் மகப்பேறு விடுப்பு உரிமையை பறித்துள்ளது திமுக அரசு!
பாஜக-வை எதிர்க்கும் தேர்தல் கட்சிகள்கூட, தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகளை அமல்படுத்தியே தீரும் என்பதை செவிலியர்கள் மீதான திமுக அரசின் தாக்குதல் நமக்கு உணர்த்துகிறது.
தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை: தேசிய கல்விக் கொள்கை 2020-இன் மாறுபட்ட வடிவமே!
தமிழ்நாட்டில் எந்த அரசாங்கம் அமைந்தாலும் அவை அமைக்கும் குழுக்களில் ஆதிக்கம் செலுத்துபவராக இருக்கும் பேராசிரியர் இராமனுஜத்தை இந்த குழுவில் நுழைத்த போதே தி.மு.க-வின் வேடம் கலைந்து விட்டது.