மீண்டும் மாருதி தொழிலாளர் போராட்டம்
தற்போது 2024 செப்டம்பர் 10லிருந்து மானேசர் மாதிரி டவுன்ஷிப் (Model Township) பகுதியில் வேலை இழந்த தொழிலாளர்களின் தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது.
இளைஞர்களை கொத்தடிமைகளாக்கும் “பிரதம மந்திரி தொழிற்பயிற்சி திட்டம்”
இளைஞர்களுக்கு வழங்கப்படும் அடிமாட்டு கூலியைக் கூட மக்கள் வரிப்பணத்திலிருந்து எடுத்துக் கொடுத்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஊதியமற்ற வேலையாட்களை உருவாக்கிக் கொடுப்பதற்காகவே இத்திட்டத்தை மோடி அரசு கொண்டுவந்துள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சிப் படுகொலை செய்யும் சவுதி அரசு
சவூதி சட்டத்தின் கீழ் தொழிலாளர்கள் ஒவ்வொரு வாரமும் கூடுதல் நேரம் உட்பட அதிகபட்சம் 60 மணிநேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும். ஆனால், அங்கு பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் வாரத்திற்கு 84 மணிநேரத்திற்கும் கூடுதலாக பணியமர்த்தப்படுகின்றனர்.
சிதைவுறும் சொர்க்கம் | பிஜின் ஜோஸ்
தொழில்நுட்ப பணிநீக்கங்களைக் கண்காணித்து புள்ளிவிவரங்களை வெளியிடும் layoffs.fyi என்ற இணையதளத்தின் கூற்றுப்படி, 2024-இல் இதுவரை 360 நிறுவனங்களால் 1,04,410 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
உலகெங்கிலும் ஐ.டி துறையில் ஆட்குறைப்பு: அம்பலப்படுத்தும் அமெரிக்க இணையதளம்
2024 ஆம் ஆண்டில் கடந்த ஜூன் மாதம் வரையிலான 6 மாதத்தில் மட்டும், உலக அளவில் ஐ.டி துறையில் முக்கிய நிறுவனங்களாக பேசப்படுகின்ற 333 நிறுவனங்களில் மட்டும் 98,834 ஊழியர்கள் வேலையில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்.
வெப்ப அலைக்கு பலியாக்கப்படும் புலம்பெயர் தொழிலாளர்கள்: அரசே முதல் குற்றவாளி
பிரேம்காலியின் கிராமத்தில் உள்ள தலித் குடும்பங்களில் பெரும்பாலானோர் செங்கல் சூளைகளுக்கு செல்வதாகவும், கைரி மற்றும் ஜ்வாஹ்ரா போன்ற சில பக்கத்து கிராமங்களில் இந்த சதவீதம் இன்னும் அதிகம் என்றும் இங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.
மும்பை இரசாயன ஆலை விபத்து: தொழிலாளர்கள் கொல்லப்படுவதற்கு அரசே காரணம்!
இராயன ஆலை இயங்குவதற்கு அடிப்படையான பாய்லர் மற்றும் இன்னும் பிற சாதனங்கள் - கருவிகளை பரிசோதிக்க தவறியது, புதியவற்றை வாங்க மறுத்தது என்ற முதலாளித்துவ லாப வெறிதான் பத்து தொழிலாளர்கள் மரணத்திற்கு காரணம்.
மருத்துவக் காப்பீட்டை சுரண்டலுக்கான கருவியாக பயன்படுத்தும் ஸ்விக்கி
எந்த மாதிரியான மருத்துவக் காப்பீட்டை ஒரு தொழிலாளி பெற வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் பொருட்டு தொழிலாளர்களை மூன்று நிலைகளில் தரம் பிரித்து வைத்துள்ளது ஸ்விக்கி நிறுவனம்.
ஊதிய குறைப்பு, பாலியல் துன்புறுத்தல்: டெல்லி அரசு மருத்துவமனையில் துப்புரவுத் தொழிலாளர்கள் போராட்டம்!
துப்புரவுத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் ₹17,000 சம்பளமாக வழங்க வேண்டும். இந்தத் தொழிலாளர்களில் பலர் நன்றாகப் படிக்காதவர்கள் என்பதால், அவர்கள் வேலைக்கு அடிக்கடி வருவதில்லை, விடுப்பு எடுக்கிறார்கள் என்று குறிப்பிட்டு அவர்களின் மாதச் சம்பளத்தை ஒப்பந்த நிறுவனம் குறைத்து வழங்குகிறது
போக்குவரத்துக் கழகங்களை தனியார்மயமாக்கும் சதியை முறியடிப்போம்!
சுருங்கக் கூறின் வசூலும், லாபமும் தனியாருக்கு! வருவாய் இழப்பும் நட்டமும் அரசுப் பேருந்துகளுக்கு!
உத்தரகாண்ட்: சுரங்கப்பாதைக்குள் சிக்கிய 40 தொழிலாளர்கள் – பேரழிவு அபாயங்களை புறந்தள்ளும் பிஜேபி அரசு!
உத்தரகாண்ட் மாநிலத்தின் மக்கள் தொகை 1 கோடி. ஆனால், அதை விட 3 மடங்கு பேர் (3 கோடி பேர்) ஆன்மீக சுற்றுலாவுக்காக அங்கு செல்கின்றனர். அங்கு ஆண்டுதோறும் சுற்றுலாத் துறையில் 140 சதவிகிதம் வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது என கடந்த காலத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
ஒசூர் அருகே அத்திப்பள்ளி மற்றும் அரியலூர் பட்டாசு கடை வெடிவிபத்தில் 24 இளம் தொழிலாளர்கள் பலி!
முதலாளிகளின் இலாபவெறியும், அதிகாரிகள் இலஞ்சப் பேய்களாக இருப்பதும் மற்றும் அவர்களின் திமிர்த்தனமான அலட்சியமும் தொழிலாளர்களின் கொத்துக் கொத்தான மரணங்களுக்கு காரணமாக உள்ளன. இங்கே தொழிலாளர்களின் உயிருக்கு எந்த மதிப்பும் இல்லை.
கார்ப்பரேட் ஃபாக்ஸ்கானுக்கு ஒரு நீதி! குல்பி ஐஸ் விற்ற கண்ணனுக்கு ஒரு நீதி!
ஆகஸ்ட் 17 அன்று ஃபாக்ஸ்கான் இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸில் (FIH) பணிபுரியும் தொழிலாளர்கள் 50–க்கும் மேற்பட்டோர் ஃபாக்ஸ்கான் விடுதியின் உணவகத்தில் கொடுத்த தரமற்ற உணவை உண்டதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கிக் தொழிலாளர்களுக்கான நல வாரியம்: தீர்வாகுமா?
ஸ்விக்கி, சொமேடோ போன்ற உணவு விநியோக நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள், குறிப்பிட்ட நேரத்திற்குள் விநியோகம் செய்யாவிட்டால் மதிப்பீட்டு புள்ளிகள் குறையும் என்பதால் வேகமாக செல்லும் போது அடிக்கடி சாலை விபத்துகளில் சிக்குகின்றனர்; சிலர் மரணம் அடைகின்றனர்.
தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சும் அமேசான் நிறுவனம்!
கிடங்கின் குறுக்கே உள்ள பல்வேறு அடுக்குகளில் இருந்து குறிப்பிட்ட பொட்டலங்களைக் கண்டறிந்து மீட்டெடுக்க வேண்டியது நிஷாவின் பணி. பணியின்போது அவர் ஓய்வின்றித் தொடர்ந்து ஒன்பது மணி நேரம் நடக்க வேண்டும்.