"வாழ்த்து சுவரொட்டியில் பார்த்தேன். தமிழகத்தின் நிதி அமைச்சரே என்று போட்டிருந்தது. நீங்களும் புத்தகத்தை மட்டும் நம்பாமல் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்".
"தமிழ்தான் நம் தாய் மொழி அதுதான் ஈசியா நமக்கு புரியும். இருந்தாலும் ஆங்கிலம் ஒரு மொழியாக நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்".
”உன்னை சேர்க்க மறுத்தவர் அப்படி செய்ததற்காக வருந்த வேண்டுமானால் நீ இந்த பள்ளியில் முதல் மாணவனாக வரவேண்டும்".
கடைசிச் சுழற்றில் cube-ன் ஒவ்வொரு பக்கமும் அதனதன் வண்ணக் கன சதுரங்கள் போய் உட்கார்ந்து கொள்வது போல் மூளையில் ஆங்கில இலக்கணம் போய் உட்கார்ந்து ஆங்கிலம் புரிந்து விட்டது.
வலி தாங்க முடியாமல் என் நண்பன் பாதியிலேயே பின்புறத்தை தேய்க்க, அடி பல மடங்குகளாகியது. ஆசிரியரின் கை ஓய்ந்துபோகும் வரை அவனுக்கு அடி விழுந்து கொண்டே இருந்தது.
"மார்க்கு போட்டா போடறான், போடாட்டி போறான். பேப்பர் திருத்தறவன் பெரிய புடுங்கியெல்லாம் கிடையாது. எனக்குத் தெரியாதா அவுனுக பவுசு?”
நகரத்தில் நான் தொலைந்து போவது போல உணர்ந்தேன். இந்த நிலையில் என்னை மீட்க உதவி செய்தது பள்ளி வாழ்க்கையில் ஆங்கில மொழியில் நான் பெற்ற அடித்தளம் தான்.
அவர் உயிராய் மதிக்கும் இஸ்லாத்தையும் குரானையும் நான் முதிர்ச்சியற்றும், முட்டாள்தனமாகவும் விமர்சிக்கும் போதெல்லாம் பொறுமையாக விளக்கியிருக்கிறார்.
ஒரு பள்ளியில் ஒரு ஆசிரியராலேயே இவ்வளவு செய்யமுடியும் என்றால், நாடு முழுவதும் பள்ளிகளில் சொர்ணவல்லி மிஸ் போல பரவியிருந்தார்கள் என்றால் எவ்வளவு அருமையான சமுதாயமாக மலரும்.
பள்ளிப் பாடங்கள் வேப்பங்காயாக கசந்தாலும், பலர் ஒன்று கூடுவதால் மட்டுமே கூட்டாம்படிப்பு என்ற ஒரே காரணத்திற்காக புத்தகத்தை திறந்ததால் மட்டுமே தேர்ச்சி பெற்ற நண்பர்களை நான் அறிவேன்.
நெல்லு இல்லாத குதிரு எதுக்கு வீட்ட அடைச்சுகிட்டுன்னு இடிச்சுட்டாங்க. இப்ப குதிரு இருந்த இடத்துல மிக்சின்னும், கிரைண்டருன்னும் பத்தாயம் இருந்த இடத்துல டீவின்னும், ஃபிரிசுன்னும் மாறிப்போச்சு.
ஆசிரியர்கள் தங்கள் அறிவுத் தேடலை துரிதப்படுத்த வேண்டும். அவர்கள் மாணவர்களுக்கு கற்பிப்பவர்களாக இருப்பதைக் காட்டிலும் வழி நடத்துபவர்களாக இருக்க வேண்டும்.
"மக்கா, எங்களை நம்பி வந்துட்டீங்க, உங்களை பத்திரமா நாங்க பாத்துக்கணும்"
ஆசிரியப்பாவுக்கு அகவலோசை உண்டு எனப் படித்த எனக்கு கவிமணியிடமிருந்து உதாரணங்களைப் பாடிக் காண்பிப்பார். நளவெண்பாவுக்கு செப்பலோசை இருப்பதை அவரைப் பார்த்துதான் அறிந்து கொண்டேன்.
வள்ளியைப் போலத்தான் வேணும் என்று நினைப்பார்களே தவிர வள்ளிதான் வேணும் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் பொண்ணோடு பொருளையும் எதிர்ப் பார்ப்பவர்கள்.