Tuesday, April 22, 2025
கால்டுவெல்-ஐ நினைவுகூர்ந்து தமிழ் மொழி – தமிழ்நாட்டு மக்களின் பார்ப்பன எதிர்ப்பு மரபை வளர்த்தெடுப்போம். ஆர்.எஸ்.எஸ்.-பாஜக கும்பலை விரட்டியடிக்கும் பாதையில் வீறு நடை போடுவோம்.
காதுகளும் கருணையுமற்ற எந்திரங்களைக் கொண்டே எதையும் சாதித்துக் கொள்கிறது அதிகார வர்க்கம்..
போராட்டம் ஓய்வதில்லை! பல கனவுகளோடும் எண்ணங்களோடும் மருத்துவம் படிக்க வந்தேன்... பிறகுதான் தெரிந்தது மருத்துவ பணியில் நீண்ட காலம் நீடிக்க முடியாதென்று.. மக்களின் மருந்துகளை மறுவழியில் விற்கலாமா? எதிர்த்து கேள்வி கேட்டேன்! மிரட்டல் வந்தது உன்னைக் கொன்றுவிடுவோம் பயப்படவில்லை துணிந்து கேள்விகள் கேட்டுக் கொண்டே இருந்தேன்... கேள்விகள் கேட்கிறேன் என்பதற்காக இரவில் வேலைக்கு வரச் சொல்வது.. இயந்திரத்தை மிஞ்சிய வேலை வாங்குவது என பழிவாங்கப்பட்டேன் அதிகார வர்க்கத்தால்.. அந்த நாளும் வந்தது கண்கள் விழித்து வேலை பார்த்து பார்வை மங்கியது, எழுந்திருக்க முடியாத அளவிற்கு உடல்வலி வயிறு வலியும் கூடவே... அரைத் தூக்கத்தில் அறைக்குச் சென்று தூங்கினேன் சிறிது நேரத்தில் வெறிபிடித்த...
போராட்டம் வெல்லட்டும்! மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. இது செய்தி அல்ல.. நாட்டையே உலுக்கிய அதிகார வர்க்கத்தின் கொடூர அநீதி.. எங்களுக்கு பாதுகாப்பென்று நினைத்த மருத்துவமனை இன்று அஞ்சி நடுங்கக் கூடிய நரகத்தினைப் போன்றுள்ளது... போராட்டம் என்னும் அணையா நெருப்பு மருத்துவ மாணவிகள் மனதில் கொழுந்து விட்டெரிகிறது.. காட்டுத்தீயாய் பரவும் மாணவர் போராட்டத்தால் அஞ்சி நடுங்கும் அதிகார வர்க்கம்.. கொடிய மிருகங்களை கூண்டில் அடைக்கும் வரை ஓயாது போராட்டம்.. நீதி கிடைக்கும் வரை நிற்கப் போவதில்லை போராட்டம் நாடு எங்கும் மருத்துவர்கள் வேலை நிறுத்தம்.. அதிகார வர்க்கமே, எங்களின் போராட்டம் சிறு துளி அல்ல.. கைகளை, தடிகளை வைத்து தடுப்பதற்கு... பொங்கிப்...
8 வயது சிறுமியின் உடையில் என்ன ஆபாசத்தை கண்டுவிட்டனர் அந்த காமவெறியர்கள். மூன்றரை வயதான சிறுமிதான் உடலுறவு வைத்துக்கொள்ள ஒப்புக்கொண்டாரா? இல்லை தன் தந்தையிடம் அன்பாக பழகியதுதான் 11 வயது சிறுமியின் குற்றமா?
மதத்தின் பேரால் கலவரங்களில் மரித்து போனவர்களின் சாம்பல்கள் சொல்லும்., காற்றில் கரைந்த இந்திய சுதந்திரத்தை...! பாலியல் சீண்டல்களால் பாதிப்புக்கு உள்ளான மல்யுத்த வீரர்களின் கனவுகள் சொல்லும்., ஒலிம்பிக்கில் பறிபோன இந்திய சுதந்திரத்தை...! தகுதித் தேர்வுகளால் கனவுகள் பறிபோன மாணவர்களின் கடைசி மூச்சு சொல்லும்., கல்வி கார்ப்பரேட்மயமான இந்திய சுதந்திரத்தை...! 420 எல்லாம் இணைந்து 370-யை நீக்கிய போது காஷ்மீரிகளின் உரிமைகள் சொல்லும்., அம்பானிகளிடம் தாரைவார்க்கப்பட்ட இந்திய சுதந்திரத்தை...! பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கப்பெற்ற இராணுவத்தின் துப்பாக்கி முனை சொல்லும்., காடுகளிலிருந்து விரட்டப்படும் பழங்குடிகளின் இந்திய சுதந்திரத்தை...! மருத்துவமனையில் உறங்கும் வேளையில் பலாத்காரம் செய்து சிதைக்கப்பட்ட மருத்துவரின் உடல் சொல்லும்., ஆணாதிக்க வெறியின் இந்திய...
பரந்தூர் பறக்கிறது! விமான நிலையம் வருவதற்கு முன்பே பரந்தூர் பறக்கிறது.. ஆந்திராவை நோக்கி! தடுப்பதற்கு தமிழ்நாடு முன் வரவில்லை! இரண்டு வருட போராட்டத்திற்கு பிறகு இரக்கமில்லாமல் அகதியைப் போல அகற்றப்படுகிறார்கள்! இல்லையில்லை.. திராவிட மாடல் அரசால் அழிக்கப்படுகிறார்கள்! ஊடகங்கள் ஊடுருவி கேள்வி கேட்பதற்கு பதில் தாலாட்டு பாடுகிறது திராவிட மாடலுக்கு! பன்னாட்டு விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டும் திராவிட மாடலுக்கு தெரியவில்லையா அவர்கள் அனாதையாக்குவது தன் நாட்டு மக்களை என்று! விளைநிலங்கள் விமானங்களின் ஓடுபாதையாக மாறுகின்றன.. திராவிட மாடல் சேவை செய்கிறது.. கார்ப்பரேட் மாடலுக்கு! அடிக்கொள்ளி விவசாயிக்கு.. வளர்ச்சி கார்ப்பரேட்டுக்கு.. வர்க்கப் போராட்டத்தில் மட்டுமே தீர்வு இருக்கு! ரசியா சமூக வலைத்தளங்களில்...
வன்முறை இதுவும் வன்முறை தான் வன்முறையாக ஒரு போதும் பார்க்கப்படுவதில்லை அது உன் விருப்பம் என்று திணிக்கப்படுகிறது சேரியில் வீடிருந்தால் பிள்ளைக்கு கல்யாணம் ஆவதில்லை கல்யாணம் ஆக வேண்டுமென்றால் வீட்டை மாற்ற வேண்டும் கல்யாணம் கூட எளிதில் முடிந்து விடும் ஆனால் வீடு கிடைப்பது? அதுவும் சேரியில் இருந்து வந்தவர்களுக்கு குதிரைக்கொம்பு சென்னையில் எந்த பகுதியில் இருந்து வந்திருக்கிறீர்கள் என்பதை மூன்றாவது மாடியில் இருந்து கேட்பார்கள் சேரியாக இருந்தால் வீடு இல்லை...
அம்பேத்கர் சிலையிலிருந்து ஆந்திரா நோக்கி ஒரு கண்ணீர் நடை பயணம் வழியனுப்புங்கள்.. இது ஆறாத் துயரம்! அத்திப்பட்டி அழிந்த ‘கதை’யை திரையில் பார்த்து கண்ணீர் விட்ட தமிழினமே.. கண்ணீர் விட இன்னொரு ‘கதை’.. அதன் பெயர் பரந்தூர்! கோரிக்கையை ஏற்காத செவிகொடுத்து கேட்காத தமிழ்நாட்டை விட்டுச் செல்வதில் பெருமை கொள்கிறோம்.. பதிமூன்று கிராம மக்களின் சொற்கள் நெஞ்சில் தைக்கிறது பல்லாயிரம் அம்புகளாய்! சொந்த நாட்டு மக்கள் ஆந்திராவிற்கு அகதிகளாய் தஞ்சம் கோர.. வந்தாரை வாழ வைக்கும் தமிழகமே.. இது...
சங்கிகளே, நாங்கள் உங்களை புறக்கணிக்கிறோம் சங்கிகளே, மெய்தி மக்களாகிய எங்களை பழங்குடி அந்தஸ்தை காட்டி இனவெறியை தூண்டிவிட்டு குக்கி மக்களை இரத்த வெள்ளத்தில் மிதக்க வைத்தீர்களே! கனிம வளங்களை களவாட அம்பானி அதானிகளுக்கு படையல் போட அமைதியாய் வாழ்ந்த எங்களின் வாழ்க்கையில் தீ வைத்தீர்களே! நாங்களோ, மண்டைக்கேறிய இனவெறியின் உச்சத்திலே குக்கிப் பெண்களை கூட்டுப் பலாத்காரம் செய்தோமே அம்மணமாக்கி வீதிகளில் இழுத்துச் சென்றோமே கண்ணில் பட்டவர்களையெல்லாம் அடித்துக் கொன்றோமே வீடுகள், ஆலயங்களை தீக்கிரையாக்கினோமே.. எத்தனை உயிர்கள் பலியானது இக்கலவரத்தில்! ஏராளமான இடங்கள் சூறையானது இம்மாபாதகத்தில்! மொத்த மணிப்பூரும் பற்றி எரிந்ததே! நீங்களோ, கலவரத் தீயை மூட்டிவிட்டு கள்ளமௌனம்...
இனி, பாசிஸ்டுகளின் கன்னம் பழுக்கும்! எங்கள் வீரம் செறிந்த விவசாயிகளின் போராட்டத்தை இழிவு செய்ய நினைத்தால் இனி உங்களின் கன்னம் பழுக்கும்!! நிலத்தைக் கீறி உழுத விவசாயிகளின் டிராக்டர்கள், உங்களின் வஜ்ராக்களை எதிர்த்து நிற்க ஒருபோதும் தயங்கியதில்லை!! எங்கள் வீரம் செறிந்த விவசாயிகள் போராட்டத்தையும், போராட்டத்தில் விவசாயிகள் செய்த உயிர் தியாகத்தையும் உலகம் அறியும்!! ஓராண்டுக்கும் மேலாய் உங்கள் டெல்லியை விவசாயிகளின் டிராக்டர்கள் உலுக்கியதை மறந்து விட்டீர்களா? மீண்டும் 100 நாட்களுக்கும் மேலாய் விவசாயிகளின் டிராக்டர்கள் பாசிசத்திற்கு எதிராக களத்தில் இறங்கி நிற்கிறதே மறந்து விட்டீர்களா? இலட்சக்கணக்கான விவசாயிகள் வாழ வழியற்று...
Will never forget Palestine கடந்த சில நாட்களாக அச்சமும் பதட்டமும் மாறி மாறி வந்தென்னை வாட்டுகின்றன. காலை எழுந்த உடனே பிணங்களும் குண்டுகளும் இடிபாடுகளில் இரையைத் தேடும் அவலமும் கண்ணில் படக் கூடாதென நினைக்கிறேன். செய்திகளைப் பார்க்க பிடிக்கவில்லை அழுத்தி அழுத்தி ரிமோட் பட்டன்கள் பழுதாகிவிடும் போல; ஆனாலும் இறுதியில் செய்திச்சேனலையே பார்க்கிறேன். பார்ப்போரிடம் எல்லாம் எரிந்து விழுந்து கொண்டிருக்கிறேன். அவநம்பிக்கை என்னை கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கொள்கிறது. இனி ஏதும் செய்ய முடியாமல் போய்விடுமோ என்ற எண்ணம் என்னை...
உலகின் செவிகளுக்கு நாங்கள் உணர்த்த விரும்புவது எங்கள் மரண ஓலத்தை அல்ல.. விடுதலை முழக்கத்தை!
கருப்புப் பணத்தை ஒழிக்கிறேனு சொல்லிபுட்டு கடுகு டப்பா, பருப்பு டப்பாள சேர்த்து வைத்த காசை எல்லாம் களவாடி போயிட்டு கருப்புப் பணத்தை மட்டும் கடைசி வரை ஒழிக்காததை நாங்க இன்னும் மறக்கல! செத்துப்போன காசை எடுத்துக்கிட்டு போன வழியிலேயே சுருண்டு விழுந்து மாண்டு போன எங்க கதையெல்லாம் நாங்க இன்னும் மறக்கல! கொரோனா காலத்துல ஒரு வேளை சோத்துக்கு கையேந்தி நாங்கள் நிற்கையில அதானி, அம்பானி மட்டும் சொத்து சேர்த்து உலக பணக்கார...
குளிர்ந்த மேகமழை பொழியும் எங்க தேசத்துல, பாஸ்பரஸ் குண்டுமழை பொழியுது. வானை எட்டும் மருத்துவக் கட்டடங்கள் இப்போ, ஊனமுற்று ஒடைஞ்சி கெடக்குது. அன்பு வெள்ளம் வழியும் எங்க  தெருக்களில், ரத்தம் பெருக்கெடுத்து வழியுது. காரு போகும் சாலையில பாசிச இசுரேலின், பீரங்கி டேங்கர்கள் வலம்வருது‌. தங்க  வீடு  இல்லேன்னு கூடாரத்துல குடிபுகுந்தா, குண்டு வந்து மேலவுழுது. பிஞ்சு கொழந்தைங்க ஒடம்பயெல்லாம் வெடிமருந்து கந்தகமோ, பிச்சு தனியே எடுக்குது. தெற்கு  காசா  வீதிகளில் எங்களின் அழுகுரலாய், மரண ஓலம் கேட்குது. ஒருவேளை சோத்துப் பொட்டலத்த கண்ணால பாக்குறதே பெரிய...

அண்மை பதிவுகள்