Tuesday, April 22, 2025
31 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட்டும் 300 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டும் இதுவரை குற்றவாளி கண்டறியப்படவில்லை என்பதுதான் ‘இந்தியாவின் ஸ்காட்லாந்து யார்ட்’ என பீற்றிக்கொள்ளப்படும் தமிழ்நாடு போலீசின் யோக்கியதை.
இறுதிக்கட்ட காட்சியில், வாத்தியார் டி.ஏ-விடம், “மக்களை அமைப்பாக்க வேண்டும். அதுவே முக்கியம்” என்பார். ஆம், மக்களை அமைப்பாக்குவது முன் எப்போதையும் விட இப்போது மிக முக்கியமான பணி. அதைத் தவிர்ப்பதை விட ஆபத்தான பணியும் வேறேதும் இல்லை.
தேதி: 07.01.2025 | நேரம்: மாலை 4.00 மணி | இடம்: ICSA Centre, சென்னை எழும்பூர்
பல கொடூரமான தாக்குதல்கள் நடத்தியபோதிலும், அனைத்தையும் தாங்கிக்கொண்டு அனைத்து சாதிப் பெண்களும் படிப்பதற்காக பள்ளிகளைத் துவங்க சாவித்ரிபாய் புலேவைத் தூண்டியது என்று சொல்லலாம்.
தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில்… என்று ‘அறம்’ பாடியவருக்கு துணை பாடியவர்களே.. இதோ… ஊருக்கே சோறு போடும் விவசாயி பட்டினிப் போராட்டம் நடத்துகிறான்! என்ன செய்யப் போகிறீர்கள்? எல்லையில் நிற்கும் இராணுவத்தாரே உம் எல்லைக்குள் நடக்கிறது ஓர் வீரம் செறிந்த போராட்டம் தேசம் காக்க… இப்போது சொல்லுங்கள்.. எது தேசம் என்று? தன் பசி தாய் அறிவாள் என கண் அயரும் உன் பிள்ளை! உன் பசியும் சேர்த்துணர்ந்த விவசாயி.. அவர் கண்ணில் இன்று உறக்கமில்லை தாயே! நீ என்ன...
உங்களுக்கு ஏதாவது பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டால் நிச்சயமாக இந்த எண்ணுக்கு (14417) புகார் அளியுங்கள் என்று ஒரு ஆசிரியராக என்னிடம் படிக்கும் பெண் குழந்தைகளிடம் இனிமேல் எப்படி, நான் சொல்ல முடியும்?
அண்ணா பல்கலைக்கழகம்: பாதிக்கப்பட்ட மாணவிக்கு எதிராகச் செயல்படும் திமுக அரசு https://youtu.be/ZQg7cblqnTI காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
அண்ணா பல்கலைக்கழக மாணவி மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு முதலில் தமிழ்நாடு அரசு பொறுப்பேற்க வேண்டும். இது தொடர்பாக பல்கலைக் பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆரம்பகால இந்தியப் பொதுவுடைமை இயக்கம் பின்னாளில் நாடாளுமன்ற இயக்கமாகச் சீரழிந்து விட்டாலும், துவக்க காலப் பொதுவுடைமை இயக்கப் போராளிகளின் வரலாறு, தியாகத்திற்கும் போர்க்குணத்திற்கும் சான்று பகர்கிறது.
"இங்கிலாந்திலுள்ள தொழிலாளிகள் மீது எனக்கு அதிகமான அக்கறை உள்ளது. ஆனாலும் இந்த அரசுக்கு எதிராகத்தான் நான் செயல்படுகிறேன். உங்கள் மக்கள் இந்த அரசால் பாதிக்கப்படுவது போலவே நாங்களும் பாதிக்கப்படுகிறோம்."
ஐந்தாம் வகுப்புத் தேர்வில் தோல்வி அடைந்த, 10 வயது மாணவர்களும் குலத்தொழிலில் ஈடுபடலாம் என்றால், இவர்கள் சொல்ல வருவது என்ன? குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு சட்டம் சொல்லும் 14 வயது என்னும் விதிமுறையை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பது தானே.
எஃகுறுதி, எளிமையான வாழ்வு, கடின உழைப்பு என்பதையே பண்புகளாகக் கொண்ட அம்மாபெரும் தலைவரை, பாலியல் வக்கிரம் பிடித்தவராக இன்று ஏகாதிபத்தியவாதிகள் கீழ்தரமாக அவதூறு செய்து வருகிறார்கள்.
தோழரே வா மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் "சிவப்பு அலை" கலைக் குழுவின் புதிய பாடல் | டீசர் https://youtu.be/EfiKMTWIXQ8 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
தீர்க்கப்படவேண்டிய வழக்கு! விளகாத இருளை கிழிக்க வீடுதோறும் ஊடுருவும் சிமிளி விளக்கின் ஒளி இருள்படிந்த வாழ்வை அகற்றுவதில்லை கிழக்கே தோன்றும் கதிரவனாய் கிராமம்தோறும் தோன்றி விடியலை மீட்டியது விவசாயிகளின் குழந்தையாய் கீழத்தஞ்சையில் தவழ்ந்த செங்கொடி! தன் துடிப்பை நிறுத்தி துக்கத்தினை வெளிப்படுத்தி தொலைதூரம் வரை துவண்டே கிடந்தது தோழர்களே, அந்த துயர நாள் உங்களுக்குத் தெரியுமா? கைப்பேசியில் கதைப்பேசி ஊர்கடக்கும் காரியமல்ல சொல்லில் சுருக்கிட முடியாத வரலாற்று சுவடு அது தன்மீது தினிக்கும் ஆண்டையின் உத்தரவை முடிக்க கண் சொருகும் நாளிகை நெருங்கிடும் உறை...

அண்மை பதிவுகள்