டிஜிட்டல் பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சியானது, இணையக் குற்றவாளிகளுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதாவது இதுபோன்ற இணையக் குற்றங்கள் ஆளும் வர்க்கத்தால் திணிக்கப்படும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் தவிர்க்கமுடியாத விளைவாகும்.
பல உயிர்கள் சைபர் மோசடி கும்பல்கள் மூலம் பறிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதில் சில நிகழ்வுகளும் மரணங்களும்தான் வழக்குகளாக பதியப்படுகின்றன. ஏராளமானவை வெளியுலகிற்கு தெரிய வருவதே இல்லை.
காசாவில் இருந்து!
எங்களின் கண்ணீரெல்லாம்
கார்மேகமாகி இருந்தால்,
காணாமல் போயிருக்கும் இசுரேல்
கடலுக்குள்…
இதோ,
காசாவெங்கும்
ஆயிரமாயிரம் பிஞ்சுகளின்
பிணக் கடல்…
குண்டுவீச்சுகளில்
சிதைபவை
எங்கள் சிறுவர்களின்
சிரங்களும் கரங்களும் தான்,
சிறகடிக்க விரும்பும்
விடுதலைக் கனவுகள் அல்ல...
சிரசில்லா சிறார்களின்
சிதைந்த உடல்களைச்
சிலுவையாய்ச் சுமக்கிறோம்;
ஈரமில்லா வெறியர்களின்
கொட்டம் அடக்கிட,
மீண்டும் உயிர்த்தெழ
வேண்டியே விதைக்கிறோம்...
உரிமை மட்டுமா
இல்லை என்றார்கள்,
ஒருவேளை உணவும் கூடத்தான்...
பாலுக்கு ஏங்கும்
பிள்ளை கண்டு,
வடித்த கண்ணீர்
வற்றியது கடந்த காலம்;
இது,
பாலூட்டும் அன்னைகளின்
மார்புகளே வற்றும் காலம்!
இனி கொடுப்பதற்கும்
எடுப்பதற்கும் மிஞ்சியிருப்பது
எங்கள் ரத்தமே!
ஆனாலும்,
வற்றாது எஞ்சியிருக்கிறது,
விடுதலை வேட்கை!
ரத்தம் வடியினும்
மண்ணில்...
ரசியப் புரட்சியைக் கொண்டாட வேண்டும்!
சோசலிச அரசின் சாதனைகளை நினைத்திட வேண்டும்!
கடந்த கால வரலாறு தெரியாதவருக்கு நிகழ்காலம் புரியாது.
நிகழ்காலம் புரியாதவருக்கு எதிர்காலமில்லை!
நவ-7,1917-ல் தோழர் லெனின் தலைமையிலான ரசிய கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாளர்களைத் திரட்டி சோசலிச கொள்கைகளைப் பரப்பி புரட்சி மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. உலக அரங்கில் முதல் உழைப்பவர்கள் அரசாக உதயமானது. இதனைப் பார்த்த...
நெருக்கடிகளே தலைவர்களை உருவாக்கும்; நெருக்கடிகளே ஊசலாட்டவாதிகளை
ஓடவும் வைக்கும்.
மார்க்சியத் துரோகிகளும் எதிரிகளும் அவதூறு செய்வதுபோல, எல்லாப் பிரச்சினைகளுக்கும், எல்லாக் காலங்களுக்கும், எல்லா நாடுகளுக்கும் பொருந்தக்கூடிய நடைமுறைகளை வைத்திருப்பதாக மரபுவழி மார்க்சியம் ஒருபோதும் உரிமை கொண்டாடவில்லை.
தேவரது சாதிவெறியை தனியாக தொகுத்தே தர முடியும். "சாணாப்பய எல்லாம் பிரதமராகி விடுவதும், கைநாட்டுப் பய எல்லாம் மானத்தை வாங்குகிறார்கள்" என்றும் காமராசரைப் பற்றி சாதிவெறி வன்மத்துடன் கூறியிருக்கிறார், முத்துராமலிங்கம்
நீங்கள் இன்னும்
எங்கள் கட்டை விரலைக் கேட்டுக் கொண்டே தான் இருக்கிறீர்கள்...
நீங்கள் இன்னும்
எங்கள் தலையை வெட்டிக் கொண்டே தான் இருக்கிறீர்கள்...
நீங்கள் இன்னும்
எங்கள் வாயில் மலத்தைத் திணித்துக் கொண்டே தான் இருக்கிறீர்கள்...
நீங்கள் இன்னும்
எங்கள் குடிதண்ணீரில் மலம் கலந்து கொண்டே தான் இருக்கிறீர்கள்...
நீங்கள் இன்னும்
எங்கள் மீது மூத்திரம் பெய்து கொண்டே தான் இருக்கிறீர்கள்...
நீங்கள் இன்னும்
எங்களை வன்புணர்ந்து கொண்டே தான்...
நீங்கள் "சிகரம் தொட்டதாக" கொண்டாடுகிற "டாடாவின் சிகரம்" உழைப்பால் எட்டியது இல்லை... இந்திய பழங்குடி, உழைக்கும் மக்களின் பிணக்குவியலின் மூலம் அடையப்பட்டது...
வான வேடிக்கையும் பிக் பாக்கெட்டும்
விதவிதமாய்
பறக்கின்றன
சுகோய்
ரபேல்
பன்னாட்டு விமானங்கள்
இந்திய மானத்தை
காற்றில் பறக்க விட்டுக் கொண்டிருக்கின்றன
கல்லா கட்ட முடிவெடுத்துவிட்டால் கார்ப்பரேட்டுகளுக்கு மானமென்ன
வெட்கம் என்ன?
வித விதமாய்
சுழல்கின்றன
வண்ணங்களை
அள்ளித் தெளிக்கின்றன
பல்லாயிரம் போலீஸ் பாதுகாப்பு
சிறு கடைகள்
மீன் கடைகள்
மீனவர்கள்
வியாபாரிகள்
புறக்கணிப்பு
உழைக்கும் மக்களைப் புறக்கணித்து
யாருக்கு
வான வேடிக்கை ?
நம்முடைய
வேதனைகளும் சோதனைகளும் தான்
அவர்களுக்கு
வான வேடிக்கை
ஒக்கி புயலில்
தத்தளித்த மீனவர்களை
காப்பாற்றாத விமானப்படைகளும்
துப்பாக்கிச் சூட்டிலிருந்து
காப்பாற்றாத
கடற்படைகளும்
மண்ணை
நீரை
வான்வெளியை
நஞ்சாக்கிய
வேதாந்தா -
கார்ப்பரேட்டிடமிருந்து
மக்களைக் காப்பாற்றாத ராணுவமும் போலீசும்
குட்டிக்கரணம்
போட்டுக்
கொண்டிருக்கின்றன
மாணவர்கள்
மீனவர்கள்
பெண்கள்
சிறு தொழில்
வியாபாரிகள்
அனைரையும்
புதைகுழியில்
தள்ளிவிட்டு
வான வேடிக்கைகளை
பார்க்கச் சொல்கிறார்கள்
காஷ்மீரின்
ஆசிபா முதல்
கதுவா...
தோழர் மாவோ தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, நிலப் பிரபுக்களையும் பிற்போக்கு முதலாளிகளையும் ஏகாதிபத்திய தாசர்களையும் வீழ்த்தி மக்கள் சீனக் குடியரசை 75 ஆண்டுகளுக்கு முன்னர் 01-10-1949-ல் நிறுவியது.
மாணவர்களின் பிரதான கவனம் அவர்களது படிப்பில் இருக்க வேண்டியது சரிதான். ஆனால் நமது நாட்டின் நிலைமையை மேம்படுத்துவதற்கான வழிவகைகளையும் திறனையும் வளர்த்துக் கொள்வது படிப்பில் ஒரு பகுதி அல்லவா?
நூரானி அரசியல் அமைப்பை நிராகரிக்கவும் இல்லை, கண்மூடித்தனமாக உயர்த்திப்பிடிக்கவும் இல்லை. அதன் பலவீனங்களைச் சரியாக அடையாளம் காட்டுகிறார். அவரது எழுத்துகள் சமகால பாசிச சூழலை அதன் உண்மையான நிறத்தில் புரிந்துகொள்ள அடிப்படையாக அமைகிறது.
கால்டுவெல்-ஐ நினைவுகூர்ந்து தமிழ் மொழி – தமிழ்நாட்டு மக்களின் பார்ப்பன எதிர்ப்பு மரபை வளர்த்தெடுப்போம். ஆர்.எஸ்.எஸ்.-பாஜக கும்பலை விரட்டியடிக்கும் பாதையில் வீறு நடை போடுவோம்.
காதுகளும் கருணையுமற்ற எந்திரங்களைக் கொண்டே எதையும் சாதித்துக் கொள்கிறது அதிகார வர்க்கம்..