கம்யூனிசத்தை பூதமென்றும், கொடுங்கோலர்களது ஆட்சி என்றும் கதை கட்டி வந்த முதலாளித்துவத்தின் முகத்தில் கரிபூசப்பட்ட நாள் நவம்பர் 7, 1917. அது உலகின் முதல் சோசலிசக் குடியரசு கட்டப்பட்ட நாள். ஜாரின் கொடுங்கோல் முடியாட்சியிலிருந்தும், முதலாளித்துவத்தின் சுரண்டலில் இருந்து ரசிய மக்கள் விடுதலை பெற்ற நாள் அது. அன்று தான் மாமேதை தோழர் லெனின் தலைமையிலான ரசிய கம்யூனிஸ்ட் கட்சி ரசியாவில் மாபெரும் சோசலிசப் புரட்சியை நடத்தியது.
அது வரலாற்றின் மற்றுமொரு நிகழ்வு அல்ல. பரிணாம வரலாற்றில் மனிதக் குரங்கிலிருந்து மனித மூதாதையர் உருவானதற்கு இணையான நிகழ்வு. நிதி, நீதி, காவல், படை, நிர்வாகம் என அரசின் அனைத்து அலகுகளையும் மக்களே செலுத்த முடியும் என்பதை நிரூபித்த நிகழ்வு. பராரிகள் பாராள முடியும் என்பதை பறைசாற்றிய நிகழ்வு. செல்வத்தைப் படைத்தவர்கள் அதன் எஜமானர்களாகவும் முடியும் என்பதை உணர்த்திய நிகழ்வு.
அந்தச் சமூகத்தில் அநாதைகள் இல்லை, விலைமாதர்கள் இல்லை, ஆதரவற்ற முதியோர் இல்லை. பெண் கல்வி – சமமான வேலைவாய்ப்பு, பேறுகால விடுமுறை, அனைவருக்கும் ஓய்வூதியம், அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை இனங்களுக்கு பிரிந்து செல்லும் உரிமை என மேற்குலகம் பல நூற்றாண்டுகளாயும் சாதிக்க முடியாத விசயங்களை சில பத்தாண்டுகளில் சாதித்துக் காட்டியது சோசலிசம்.
இத்தகைய சாதனைகளை நிகழ்த்திய ரசியாவிலும் பிற சோசலிச நாடுகளிலும் மீண்டும் முதலாளித்துவம் வெற்றி பெற்றுவிட்டது என்பது உண்மைதான். தொழிலாளி வர்க்கத்துக்கும் முதலாளி வர்க்கத்துக்கும் இடையிலான போரின் ஒரு சுற்றில் தொழிலாளி வர்க்கம் தோற்றிருக்கிறது. இத்தகைய தோல்விகள் எதிர்பாரதவையல்ல. இதுவே இறுதிச் சுற்றும் அல்ல.
அதனை, 2010 வால் ஸ்ட்ரீட் எழுச்சி உலக முதலாளித்துவத்தின் கருவறையான அமெரிக்காவின் தலையில் ஓங்கியடித்து பறைசாட்டியிருக்கிறது. “முதலாளித்துவம் ஒழிக” என இலட்சக்கணக்கான மக்கள் குரல் எழுப்பினர். முதலாளித்துவ பொருளாதார வல்லுனர்களும் கூட மார்க்சின் மூலதனம் குறித்த கசப்பான உண்மைகளை அங்கீகரித்து விழுங்க வேண்டியதாயிற்று.
தனது உள்முரண்பாடுகளாலேயே முதலாளித்துவம் தனக்கான புதைகுழியைத் தோற்றுவித்திருக்கிறது. அதன் அழிவிலிருந்து அதனைக் காப்பது என்பது எந்த தேவனாலும் சாத்தானாலும் இயலாத காரியம். அதன் அழிவு தவிர்க்கவியலாதது. அதன் அழிவோடு மனிதகுலமும் தன்னை அழித்துக் கொள்ளுமா அல்லது முதலாளித்துவத்தின் பிடியிலிருந்து தப்புமா என்பதை மனித குலம் தனது செயல்பாட்டின் மூலமாகத் தான் தீர்மானிக்க முடியும் என்றார் மார்க்ஸ்
நவம்பர் புரட்சியின் எளிய அறிமுகத்தை தருகிறது இத்தொகுப்பு
தோழமையுடன்
வினவு
நமக்கும் வேண்டும் நவம்பர் புரட்சிநூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
பதினேழு கட்டுரைகள் – 160 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில் – மின் நூல் விலை ரூ. 20.00 |
![]() ₹20.00Add to cart |
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் வினவு தளத்தில் ஏற்கனவே வெளியாகியுள்ளன.